சாரல் (1)

குடைக்குள் மழை

மழை வரும்போதெல்லாம்
குடை விரிப்பவன் நான்
சிறு தூரலோ பெரு மழையோ
என் குடை மலர்ந்து நிற்கும்



முகத்தில் சாரல் படர்கையில்
சிலிர்ப்பவர்களைப் பார்த்து சிரித்திரிக்கிரேன்
குடை விளிம்பில் வழியும் அருவியுடன்
விளயாடுபவர்களோ என்னைப் பார்த்து சிரிப்பவர்கள்


என் குடையிலிருப்பது
துருப்பிடித்த கம்பிகளும்
எப்போதோ வானம் மறைத்த
சில கருப்பு கிழிசல்களும்


மழை எல்லோருக்கும் பொது
இது என் குடை
என் குடைக்குள் விழும் மழை
என் மழை

சாரல்


மெலிதாய் ஒரு மழை...

ஜன்ன்லோர இருக்கையில் ஒரு பேருந்து பயணம்..

மழையின் சாரல் முகத்தில் சிலிர்க்க..

மனதில் ஒரு சுகம்...

அதே போன்ற உணர்வுதான் என் நண்பனின் படைப்புக்களை படிக்கையில் ..


அந்த படைப்புக்களை என் பதிவில் சாரல் என்ற தலைப்பில் வெளியிடுகிறேன்..


Keep Reading :)